நெல்மூட்டைகள் ஏற்றிவந்த லாரி வயலில் கவிழ்ந்தது


நெல்மூட்டைகள் ஏற்றிவந்த லாரி வயலில் கவிழ்ந்தது
x

நெல்மூட்டைகள் ஏற்றிவந்த லாரி வயலில் கவிழ்ந்தது.

திருச்சி

உப்பிலியபுரம்:

திருச்சி மாவட்டம் புளியஞ்சோலை அருகே கீரிப்பட்டி பகுதியில் உள்ள விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட 280 நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று திருநெல்வேலி நோக்கி சென்று கொண்டிருந்தது. திருநெல்வேலியை சேர்ந்த குருசாமி என்பவருக்கு சொந்தமான அந்த லாரியை டிரைவர் சிவா(வயது 26) ஓட்டினார்.

உப்பிலியபுரத்தை அடுத்த சிறுநாவலூர் அருகே வந்தபோது எதிரே வந்த காருக்கு வழிவிட, லாரியை இடதுபுறமாக டிரைவர் திருப்பினார். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் உள்ள வயலில் கவிழ்ந்தது. இதில் லாரியில் இருந்த நெல் மூட்டைகள் வயலில் சரிந்து விழுந்தன. டிரைவர் சிவா அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த உப்பிலியபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ், போலீசாருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர்.


Next Story