வெந்நீர் கொட்டியதில் ஆண் குழந்தை சாவு


வெந்நீர் கொட்டியதில் ஆண் குழந்தை சாவு
x

வெந்நீர் கொட்டியதில் ஆண் குழந்தை உயிரிழந்தார்.

திருச்சி

துவரங்குறிச்சி:

ஆண் குழந்தை

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள என்.பெருமாம்பட்டியை சேர்ந்தவர் இளையராஜா(வயது 33). இவருக்கு ஒரு வயதில் முகின்ராவ் என்ற ஆண் குழந்தை இருந்தது. இந்நிலையில் இளையராஜாவின் மனைவி, தனது குழந்தையுடன் மட்டக்குறிச்சியில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு சென்றதாக தெரிகிறது.

கடந்த 28-ந் தேதி அந்த வீட்டில் இளையராஜாவின் மனைவி சமைத்து கொண்டிருந்தார். அப்போது உலையில் இருந்து செம்பில் எடுத்து வைத்திருந்த வெந்நீரை குழந்தை முகின்ராவ் தட்டி விட்டதாக கூறப்படுகிறது. இதனால் கொட்டிய வெந்நீர் பட்டு குழந்தையின் நெஞ்சு, இடுப்பு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.

சாவு

இதைக்கண்டு பதறிய உறவினர்கள், முகின்ராவை உடனடியாக மீட்டு திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட குழந்தை முகின்ராவ், அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது.

குழந்தையின் உடலை கண்டு உறவினர்கள் கதறி அழுதது காண்போரையும் கண்கலங்க செய்தது. இந்த சம்பவம் குறித்து வளநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெந்நீர் கொட்டியதில் காயமடைந்த குழந்தை இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story