இளம்பெண்ணை தாக்கியவர் கைது

தியாகதுருகம் அருகே இளம்பெண்ணை தாக்கியவர் கைது செய்யப்பட்டாா்.
தியாகதுருகம் அருகே உள்ள சாத்தபுத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 55). இவரும், அதே பகுதியை சேர்ந்த மாரி (45) என்பவரும் உறவினர்கள். 2 குடும்பத்திற்கும் உறவு முறையில் கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று அருணாச்சலம் மகள் செல்வி (25) அதே பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் இருந்தபோது அங்கு வந்த மாரி அவரை திட்டி, தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் செல்வி லேசான காயம் அடைந்தார். இது குறித்து அருணாச்சலம் கொடுத்த புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாரியை கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





