வாலிபரிடம் பணம் பறித்தவர் கைது


வாலிபரிடம் பணம் பறித்தவர் கைது
x

வாலிபரிடம் பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.

கரூர்

கரூர் தூளிப்பட்டியை சேர்ந்தவர் மனோஜ் (வயது 23). இவர் புலியூர் அமராவதி நகர் பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது கிருஷ்ணராயபுரத்தை சேர்ந்த ராஜபாண்டி (36) என்பவர் மனோஜை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி அவர் பாக்கெட்டில் வைத்திருந்த ரூ.200-ஐ பறித்துள்ளார். இதுகுறித்து மனோஜ் கொடுத்த புகாரின்பேரில், பசுபதிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வழக்குப்பதிந்து, ராஜபாண்டியை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

1 More update

Next Story