பெண்ணை மிரட்டியவர் கைது

வீரவநல்லூர் அருகே பெண்ணை மிரட்டியவரை போலீசார் கைது செய்தனர்.
அம்பை:
வீரவநல்லூரை அடுத்த வெள்ளாங்குழி, பஜனை மடத் தெருவை சேர்ந்தவர் சுடலை முத்து. இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அவரது உறவினரான சுடலைமுத்து என்ற சங்கர் (வயது 37) என்பவருக்கும் இடையே சொத்து பிரச்சனை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதன் காரணமாக நேற்று முன்தினம் சுடலை முத்துவின் வீட்டிற்கு முன்பு வைத்து சுடலைமுத்துவையும், அவருடைய மகளையும் சுடலை முத்து என்ற சங்கர் அவதூறாக பேசி மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சுடலைமுத்து என்ற சங்கரை நேற்று கைது செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





