தந்தை கண்முன் சாரத்தில் இருந்து தவறி விழுந்து கொத்தனார் சாவு


தந்தை கண்முன் சாரத்தில் இருந்து தவறி விழுந்து கொத்தனார் சாவு
x

மதுரையில் தந்தை கண்முன் சாரத்தில் இருந்து தவறி விழுந்து கொத்தனார் பரிதாபமாக இறந்தார்.

மதுரை

மதுரை செல்லூர் நாகம்மாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கருப்பையா (வயது 51). இவரது மகன் காளமேகப்பெருமாள் (25). இருவரும் கொத்தனாராக வேலை பார்த்து வந்தனர். இருவரும் ஆண்டாள்புரம் பகுதியில் உள்ள சத்துணவு கட்டிடத்தில் கடந்த 3 மாதங்களாக வேலை பார்த்து வந்தனர். சம்பவத்தன்று தந்தையும், மகனும் 10 அடி உயரத்தில் சாரம் அமைத்து அதில் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று காளமேகப்பெருமாள் சாரத்தில் இருந்து கால் தவறி கீழே விழுந்தார். அவரை பிடிப்பதற்காக கருப்பையா முயற்சி செய்தார். அதில் இருவரும் கீழே விழுந்து பலத்த அடிபட்டு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் காளமேகப்பெருமாள் பரிதாபமாக உயிரிழந்தார். கருப்பையாவிற்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவம் குறித்து சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Related Tags :
Next Story