தி மு க இளைஞரணிக்கு அதிக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்


தி மு க இளைஞரணிக்கு அதிக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்
x

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தி மு க இளைஞரணிக்கு அதிக உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் இளைஞரணி செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு தெற்கு மாவட்ட பொறுப்பாளர் வசந்தம்.கார்த்திகேயன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாவட்ட இளைஞர்அணி துணை அமைப்பாளர் தாஸ் முன்னிலை வகித்தார். மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தாகப்பிள்ளை வரவேற்றார். மாநில இளைஞரணி துணை செயலாளர் சேகர் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு இல்லந்தோறும் இளைஞரணி திட்டத்தை செயல்படுத்துவது, பாசறை கூட்டம் நடத்துவது,புதிய உறுப்பினர் சேர்க்கை ஆகியவை குறித்து ஆலோசனை வழங்கினார்கள்.

கூட்டத்தில் இளைஞர் அணிக்கு அதிகளவில் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். இளைஞரணி செயலாளர் உதயநிதியின் செயல் திட்டமான இல்லந்தோறும் இளைஞரணி என்ற திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் முருகன், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ராமமூர்த்தி, காமராஜ், சண்முகம், மடம்.பெருமாள், கள்ளக்குறிச்சி நகர செயலாளர் சுப்ராயலு, ஒன்றிய செயலாளர்கள் வெங்கடாசலம், நெடுஞ்செழியன் அண்ணாதுரை, இளைஞரணி நிர்வாகி பிரகாஷ் உள்பட மாவட்ட ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் நகர இளைஞர் அணி அமைப்பாளர் ரமேஷ் நன்றி கூறினார்.


Next Story