மகனை தொடர்ந்து தாயும் சாவு


மகனை தொடர்ந்து தாயும் சாவு
x

மகனை தொடர்ந்து தாயும் உயிரிழந்தார்.

திருச்சி

ஸ்ரீரங்கம்:

விஷம் குடித்தனர்

திருச்சி ஸ்ரீரங்கம் மேலவாசல் பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 70). இவருடைய மனைவி சிவகாமி(60). இவர்களுக்கு செந்தில், தினேஷ்(36) என 2 மகன்கள் இருந்தனர். இதில் செந்தில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

தினேஷ் மனநலம் பாதிக்கப்பட்டு நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை. இதனால் விரக்தி அடைந்த மோகன் தனது மனைவி, மகனுடன் கடந்த 11-ந் தேதி இரவு தனது வீட்டில் விஷம் குடித்தார். மறுநாள் காலை அவர்கள் 3 பேரும் மயங்கி கிடந்தனர்.

தாயும் சாவு

இது பற்றி தகவல் அறிந்த ஸ்ரீரங்கம் போலீசார் அங்கு சென்று, 3 பேரையும் மீட்டு திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தினேஷ் பரிதாபமாக இறந்தார். மற்ற 2 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் நேற்று காலை சிவகாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள மோகனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story