தேர்தல் வெற்றியை நோக்கிய நம் பயணத்தில் அடுத்த நூறு நாட்களும் மிக முக்கியமானவை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்


தேர்தல் வெற்றியை நோக்கிய நம் பயணத்தில் அடுத்த நூறு நாட்களும் மிக முக்கியமானவை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
x

கடமையுணர்வோடு ஓய்வின்றி உழைப்போம்; இந்தியாவை வெற்றி பெறச் செய்வோம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

நாற்பதும் நமதே! நாடும் நமதே! என்பதை உறுதிசெய்யும் விதமாக மிக எழுச்சியோடு பிரமாண்டமாகத் தமிழ்நாடெங்கும் நடந்தேறியுள்ளன 'உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்' பொதுக்கூட்டங்கள்!

வெற்றிகரமாக இந்தக் கூட்டங்களை ஒருங்கிணைத்த மாவட்டக் கழகச் செயலாளர்கள் – கழக முன்னணியினர் என அனைவர்க்கும் பாராட்டுகள்! நன்றி!

2024 தேர்தல் வெற்றியை நோக்கிய நம் பயணத்தில் அடுத்த நூறு நாட்களும் மிக முக்கியமானவை. கடமையுணர்வோடு ஓய்வின்றி உழைப்போம்; இந்தியாவை வெற்றி பெறச் செய்வோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story