மூதாட்டியை தாக்கி தங்கச்சங்கிலி, கம்மலை பறிப்பு


மூதாட்டியை தாக்கி தங்கச்சங்கிலி, கம்மலை பறிப்பு
x

கரூர் அருகே மூதாட்டியை தாக்கி தங்கச்சங்கிலி, கம்மலை பறித்து ெசன்ற 2 வாலிபர்களை ேபாலீசார் வலைவீசி ேதடி வருகின்றனா்.

கரூர்

தங்கச்சங்கிலி- கம்மல் பறிப்பு

கரூர் அருகே உள்ள மண்மங்கலம் பாலாஜி நகரை சேர்ந்தவர் பிச்சைகாந்தி. இவரது மனைவி சந்திரா (வயது 63). இவர் சம்பவத்தன்று மதியம் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி சந்திராைவ தாக்கி அவா் அணிந்திருந்த 7 பவுன் தங்கச்சங்கிலி, 1 பவுன் கம்மல் ேஜாடி ஆகியவற்றை பறித்தனர். பின்னர் அவரை கீழே தள்ளி விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சந்திரா திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அதற்குள் வாலிபர்கள் 2 பேரும் தங்கச்சங்கிலி மற்றும் கம்மலுடன் அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்.

வாலிபர்களுக்கு வலைவீச்சு

வாலிபர்கள் கீழே தள்ளி விட்டதில் காயம் அடைந்த சந்திராவை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மண்மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து சந்திரா வாங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உதயக்குமார் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிந்து, தப்பிய வாலிபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story