நடைபயிற்சி சென்ற முதியவர் தவறி விழுந்து சாவு

நாமக்கல்லில் நடைபயிற்சி சென்ற முதியவர் தவறி விழுந்து இறந்தார்.
நாமக்கல் ஏ.எஸ்.பேட்டையை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது72). இவர் நேற்று முன்தினம் அதிகாலை நடைபயிற்சி சென்றார். நாமக்கல் உழவர்சந்தை அருகே நடந்து சென்றபோது தவறி கீழே விழுந்து விட்டதாக கூறப்படுகிறது.
இதில் காயம் அடைந்த அவரை குடும்பத்தினர் சிகிச்சைக்காக நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன்இன்றி சுப்பிரமணியன் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து அவரது மகன் குணசேகரன் (41) நாமக்கல் போலீசில் புகார் செய்தார். இதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





