மயங்கி விழுந்த முதியவர் சாவு


மயங்கி விழுந்த முதியவர் சாவு
x
தினத்தந்தி 4 May 2023 6:45 PM GMT (Updated: 4 May 2023 6:45 PM GMT)

குளச்சல் துறைமுகத்தில் மயங்கி விழுந்த முதியவர் சாவு

கன்னியாகுமரி

குளச்சல்:

குளச்சல் துறைமுகத்தில் மயங்கி விழுந்த முதியவர் சாவு

குளச்சல் மீன்பிடித்துறைமுக பகுதியில் சம்பவத்தன்று அடையாளம் தெரியாத 65 வயது மதிக்கத்தக்க முதியவர் வாயில் நுரை தள்ளி மயங்கி கிடந்தார். இதை பார்த்த அப்பகுதியினர் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். அவர் யார்? எந்த ஊர்? என்று தெரியவில்லை. உறவினர்கள் அடையாளம் காண முதியவரின் உடல் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story