மயங்கி விழுந்து மூதாட்டி சாவு


மயங்கி விழுந்து மூதாட்டி சாவு
x
தினத்தந்தி 26 May 2023 12:15 AM IST (Updated: 26 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருவாடானை அருகே மயங்கி விழுந்து மூதாட்டி இறந்தார்.

ராமநாதபுரம்

தொண்டி,

திருவாடானை தாலுகா பெருவண்டல் கிராமத்தைச் சேர்ந்தவர் காசி என்பவரின் மனைவி ஜெயராணி (வயது 50). இவரது தாயார் காந்திமதி (73) என்பவர் மனநிலை சரியில்லாமல் இருந்து வந்துள்ளார். இதனால் அவர் அடிக்கடி காணாமல் போய்விடுவாராம். அதேபோல் சில தினங்களுக்கு முன்பு காணாமல் போனவர் கற்காத்தக்குடி கிராமத்தில் ஒரு வயல்காட்டில் மயங்கி கிடந்தாராம். உடனே அவரை திருவாடானை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த திருவாடானை போலீசார் காந்திமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஜெயராணி அளித்த புகாரின் பேரில் திருவாடானை போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தினர்.

1 More update

Related Tags :
Next Story