மின்சாரம் பாய்ந்து மயில் செத்தது


மின்சாரம் பாய்ந்து மயில் செத்தது
x

மின்சாரம் பாய்ந்து மயில் செத்தது

திருச்சி

தொட்டியம் அருகே முள்ளிப்பாடி ஊராட்சி திருஈங்கோய் மலையில் மயில் மின்கம்பியில் சிக்கி மின்சாரம் பாய்ந்து செத்து கிடந்தது. இதை அறிந்த கிராம நிர்வாக அதிகாரி முத்துமணி நேரில் சென்று பார்வையிட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். வனக்காப்பாளர் நசுருதீன், வன காவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில் மின்சாரம் பாய்ந்து இறந்தது 3 வயதுடைய ஆண் மயில் என தெரியவந்தது. பின்னர் வனத்துறையினர் அந்த மயிலை தும்பலம் வன பகுதியில் புதைத்தனர்.

1 More update

Related Tags :
Next Story