பஸ் நிலையத்தில் தவறி விழுந்தவர் சாவு

பஸ் நிலையத்தில் தவறி விழுந்தவர் பரிதாபமாக இறந்தார்.
ஆலங்குடியை சேர்ந்தவர் சண்முகம் (வயது 40). இவர் சம்பவத்தன்று புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் காத்திருப்பு அறையில் இருக்கையில் இருந்து தவறி கீழே விழுந்ததில் படுகாயமடைந்தார். இதையடுத்து அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சண்முகம் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





