லாரியில் சரள் மண் கடத்தியவர் கைது

நெல்லை அருகே லாரியில் சரள் மண் கடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை அருகே தாழையூத்து குறிச்சிகுளம் விலக்கு பகுதியில் நேற்று தாழையூத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை நடத்தினர். அதில் லாரியில் சரள்மண் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரியை ஓட்டிவந்த குறிச்சிகுளம் தெற்கு தெருவை சேர்ந்த முத்துராஜை (வயது 30) கைது செய்தனர். மேலும் டிப்பர் லாரி மற்றும் 2 யூனிட் சரள்மண் பறிமுதல் செய்யப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





