மதுபாட்டில்களை கடத்தி வந்தவர் கைது

மதுபாட்டில்களை கடத்தி வந்தவர் கைது
பொள்ளாச்சி
பொள்ளாச்சி பழைய பஸ் நிலையத்தில் நகர கிழக்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் பேரில் அங்கு நின்ற ஒருவரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவரிடம் புதுச்சேரி மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் திருச்சி மாவட்டம் திருவெரும்பூரை சேர்ந்த குமார் (வயது 50) என்பதும், புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்து விற்பனை செய்ததும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 33 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





