வரத்து அதிகரிப்பு எதிரொலி:நாமக்கல்லில் பூக்கள் விலை குறைந்தது


வரத்து அதிகரிப்பு எதிரொலி:நாமக்கல்லில் பூக்கள் விலை குறைந்தது
x

நாமக்கல் தினசரி மார்க்கெட்டுக்கு பூக்களின் வரத்து அதிகரித்து இருப்பதால், அவற்றின் விலை குறைந்து உள்ளது.

நாமக்கல்

பூக்கள் விலை விவரம்

நாமக்கல் மாவட்டம் மோகனூர், சேந்தமங்கலம், எருமப்பட்டி சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவில் பூக்கள் பயிர் செய்யப்பட்டு வருகிறது. இந்த பூக்கள் நாமக்கல் பஸ்நிலையத்தில் உள்ள தினசரி பூ மார்க்கெட்டுக்கு விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. அந்த வகையில் தற்போது சுமார் 2.5 டன் வரை பூக்கள் விற்பனைக்கு வருகிறது. இவற்றை வியாபாரிகள் வாங்கி சென்று நகர் முழுவதும் விற்பனை செய்கின்றனர்.

இந்த நிலையில் பூக்களின் வரத்து அதிகரித்து இருப்பதால், அவற்றின் விலை சரிவடைந்து உள்ளது. நேற்று நாமக்கல் தினசரி பூ மார்க்கெட்டில் மல்லிகை பூ நேற்று கிலோ ரூ.240-க்கும், முல்லை பூக்கள் கிலோ ரூ.700-க்கும், சாதி மல்லி ரூ.400-க்கும் விற்பனை செய்யப்பட்டன.

விவசாயிகள் கவலை

இதேபோல் சம்பங்கி கிலோ ரூ.50-க்கும், அரளி ரூ.70-க்கும் விற்பனையானது. கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பனி காரணமாக பூக்கள் உற்பத்தி வெகுவாக குறைந்து இருந்தது. ஆனால் தற்போது பூக்கள் உற்பத்தி அதிகரித்து, பூக்களின் வரத்து உயர்ந்து உள்ளது. இதுவே விலை குறைய காரணம் ஆகும். பூக்கள் விலை குறைந்து இருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர்.

கடந்த 2 வாரங்களுக்கு முன்பு நாமக்கல்லில் மல்லிகை பூ கிலோ ரூ.700-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story