கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு


கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு
x
தினத்தந்தி 23 Dec 2022 6:45 PM GMT (Updated: 23 Dec 2022 6:47 PM GMT)

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்தது. மல்லிகை கிேலா ரூ.2,000-க்கு விற்பனையானது.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை கடுமையாக உயர்ந்தது. மல்லிகை கிேலா ரூ.2,000-க்கு விற்பனையானது.

பூ மார்க்கெட்

ஆரல்வாய்மொழி அருகே உள்ள தோவாளையில் பிரசித்தி பெற்ற பூ மார்க்கெட் உள்ளது. இங்கு குமரி மாவட்டத்தின் பல இடங்களில் இருந்தும், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. அவற்றை வாங்கி செல்ல அண்டை மாநிலமான கேரளா மற்றும் வெளியூர்களில் இருந்து அதிகாலையிலே வியாபாரிகள் வருவார்கள். பூக்களின் வரவை பொறுத்தும், மக்களின் தேவையை பொறுத்தும் பூக்களின் விலையில் மாற்றம் ஏற்படும்.

நாளை (ஞாயிற்றுக்கிழமை) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப் படுவதையொட்டி தோவாளை பூ மார்க்கெட்டில் ேநற்று பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டது.

மல்லிகை கிலோ ரூ.2000

நேற்று முன்தினம் கிலோ ரூ.1,300-க்கு விற்பனையான மல்லிகை பூ நேற்று ரூ.700 உயர்ந்து ரூ.2,000-க்கு விற்பனையானது. இதுபோல் கிேலா ரூ.500-க்கு விற்பனையான கனகாம்பரம் ரூ,1,250-க்கும், ரூ.600-க்கு விற்பனையான பிச்சி ரூ.1,500-க்கும், ரூ.550-க்கு விற்பனையான முல்லை ரூ.1,400-க்கும் விற்பனையானது.

இதுகுறித்து பூ வியாபாரி கிருஷ்ணகுமார் கூறும்போது, "கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுவதால் பூக்களின் விலை கிடு கிடு வென உயர்ந்துள்ளது. மார்க்கெட்டில் விற்பனைக்காக வந்த சுமார் 70 டன் பூக்கள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டது" என்றார்.

விலை விவரம்

தோவாளை மார்க்கெட்டில் நேற்று விற்பனையான பிற பூக்களின் விலை கிலோவில் வருமாறு:-

அரளி ரூ.270, சம்பங்கி ரூ. 70, ரூ.1,250, வாடாமல்லி ரூ.70, துளசி ரூ.30, தாமரை (ஒரு எண்ணம்) ரூ.10, கோழிப்பூ ரூ.60, பச்சை (ஒரு கட்டு) ரூ.8, ரோஸ் பாக்கெட் ரூ.20, பட்டன் ரோஸ் ரூ.180, ஸ்டெம்பு ரோஸ் (ஒரு கட்டு) ரூ.300, மஞ்சள் கேந்தி ரூ.65, சிவப்புக்கேந்தி ரூ. 70, சிவந்தி மஞ்சள் ரூ.160, சிவந்தி வெள்ளை ரூ.200, கொழுந்து ரூ.300, மருக்கொழுந்து ரூ.180 என விற்பனையானது.


Next Story