தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு


தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு
x
தினத்தந்தி 12 Jan 2023 6:45 PM GMT (Updated: 12 Jan 2023 6:47 PM GMT)

பொங்கல் பண்டிகையையொட்டி தோவாளை பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்தது. மல்லிகை கிலோ ரூ.1,700-க்கு விற்பனையானது.

கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி,


பொங்கல் பண்டிகையையொட்டி தோவாளை பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்தது. மல்லிகை கிலோ ரூ.1,700-க்கு விற்பனையானது.

பூ மார்க்கெட்

தோவாளையில் பிரசித்தி பெற்ற பூ மார்க்கெட் உள்ளது. இங்கு குமரி மாவட்டத்தின் பல இடங்களில் இருந்தும், பிற மாவட்டங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இவற்றை வாங்கி செல்ல கேரளாவில் இருந்தும் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் வியாபாரிகள் வருவார்கள்.

பூக்களின் வரவை பொறுத்தும், மக்களின் தேவையை பொறுத்தும் விலையில் மாற்றம் ஏற்படும். பொதுவாக முகூர்த்தம் மற்றும் பண்டிகை நாட்களில் பூக்களின் விலை உயர்ந்து காணப்படும். பிற நாட்களில் விலை குறைவாக இருக்கும்.

இந்தநிலையில் பொங்கல் பண்டிகை நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தோவாளை மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்தது.

மல்லிகை கிலோ ரூ.1,700

நேற்று முன்தினம் கிேலா ரூ.1,300-க்கு விற்பனையான மல்லிகை பூ நேற்று ரூ.400 உயர்ந்து கிலோ ரூ.1,700-க்கு விற்பனையானது. இதுபோல் பிச்சி பூ ரூ.650-ல் இருந்து ரூ.600 உயர்ந்து நேற்று கிலோ ரூ.1,250-க்கும், முல்லை ரூ.550-ல் இருந்து ரூ.650 உயர்ந்து கிேலா ரூ.1,200-க்கும் விற்பனையானது.

தோவாளை மார்க்கெட்டில் நேற்று விற்பனையான பூக்களின் விலை கிலோவில் வருமாறு:-

அரளி ரூ.350, சம்பங்கி ரூ.125, கனகாம்பரம் ரூ.400, வாடாமல்லி ரூ.100, துளசி ரூ.30, தாமரை (100 எண்ணம்) ரூ.1,500, கோழிப்பூ ரூ.50, பச்சை ஒரு கட்டு ரூ.8, ரோஸ் பாக்கெட் ரூ.20, பட்டன் ரோஸ் ரூ.220, ஸ்டெம்புரோஸ் (ஒரு கட்டு) ரூ.250, மஞ்சள் கேந்தி ரூ.90, சிவப்பு கேந்தி ரூ.90, சிவந்தி மஞ்சள் ரூ.130, சிவந்தி வெள்ளை ரூ.200, கொழுந்து ரூ.180, மருக்கொழுந்து ரூ.130 என விற்பனையானது.

கடந்த ஆண்டு விலை

கடந்த ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு 2 தினங்களுக்கு முன்பு பூக்கள் விலை உயர்ந்து காணப்பட்டது. அன்றைய தினம் பிச்சி கிலோ ரூ.1,250 க்கும், மல்லிகை மற்றும் முல்லை கிேலா ரூ.1,200 க்கும் விற்பனையானது.


Next Story