தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு


தோவாளை மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்வு
x
தினத்தந்தி 3 Feb 2023 6:45 PM GMT (Updated: 4 Feb 2023 1:51 PM GMT)

தோவாளை பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்தது. மல்லிகை கிலோ ரூ.1500-க்கு விற்பனையானது.

கன்னியாகுமரி

ஆரல்வாய்மொழி:

தோவாளை பூ மார்க்கெட்டில் பூக்கள் விலை உயர்ந்தது. மல்லிகை கிலோ ரூ.1500-க்கு விற்பனையானது.

பூக்கள் விலை உயர்வு

குமரி மாவட்டம் தோவாளையில் பிரசித்தி பெற்ற பூ மார்க்கெட் உள்ளது. இங்கு குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பூக்கள் கொண்டு வரப்படுகின்றன. மேலும், நெல்லை, மதுரை போன்ற பிற மாவட்டங்களில் இருந்தும் பூக்கள் வருகின்றன. தினமும் அதிகாலையிலேயே பூக்கள் விற்பனைக்காக வருவதால், அவற்றை வாங்கி செல்ல குமரி மற்றும் கேரளா மாநிலத்தில் இருந்து ஏராளமான வியாபாரிகள் வருகிறார்கள்.

இந்தநிலையில், தைப்பூசத்தை முன்னிட்டு நேற்று பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் கிலோ ரூ.900-க்கு விற்பனையான மல்லிகை பூ, நேற்று ரூ.600 உயர்ந்து ரூ.1,500-க்கு விற்பனை ஆனது. அதுபோல் மற்ற பூக்களின் விலையும் உயர்ந்து காணப்பட்டது.

விலை விவரம்

தோவாளை பூ மார்க்கெட்டில் மற்ற பூக்களின் விலை விவரம் கிலோவில் வருமாறு:-

அரளிப்பூ ரூ.120, பிச்சி ரூ.1,750, மல்லி ரூ.1,500, முல்லை ரூ.1,600, சம்பங்கி ரூ.125, கனகாம்பரம் ரூ.750, வாடாமல்லி ரூ.70, துளசி ரூ.50, தாமரை (100 எண்ணம்) ரூ.1000, கோழிப்பூ ரூ.60, பச்சை ஒரு கட்டு ரூ.8, ரோஜா (100 எண்ணம்) ரூ.20, பட்டன் ரோஸ் ரூ.100, ஸ்டெம்பு ரோஸ் (ஒரு கட்டு) ரூ.400, மஞ்சள் கிரேந்தி ரூ.55, சிவப்பு கிரேந்தி ரூ.60, சிவந்தி மஞ்சள் ரூ.80, சிவந்தி வெள்ளை ரூ.100, கொழுந்து ரூ.70 , மரிக்கொழுந்து ரூ.90 என விற்பனையானது.


Next Story