பூக்கள் விலை கிடுகிடு உயர்வு


பூக்கள் விலை கிடுகிடு உயர்வு
x

பூக்கள் விலை கிடுகிடு உயர்ந்துள்ளது.

கரூர்

நொய்யல் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் குண்டுமல்லி உள்ளிட்ட பல்வேறு வகையான பூக்களை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர். பூக்கள் விளைந்தவுடன் பறித்து, தினசரி மார்க்கெட்டுக்கும், உள்ளூர் பகுதிக்கு வரும் வியாபாரிகளுக்கும் விற்பனை செய்து வருகின்றனர்.கடந்த வாரம் குண்டு மல்லி கிலோ ரூ.500-க்கு விற்ற குண்டு மல்லி தற்போது கிலோ ரூ.900-க்கும், சம்பங்கி ரூ.70-க்கு விற்றது ரூ.150-க்கும், அரளி ரூ.80- க்கு விற்றது ரூ.180-க்கும், ரோஜா ரூ.150-க்கு விற்றது ரூ.260-க்கும், முல்லைப் பூ ரூ.400-க்கு விற்றது ரூ.800-க்கும், செவ்வந்திப்பூ ரூ.180-க்கு விற்றது ரூ.320-க்கும்,, கனகாம்பரம் ரூ.500-க்கு விற்றது ரூ.850-க்கும் விற்பனையானது.ஐப்பசி மாதம் தொடங்கி விட்டதாலும், திருமணம் உள்ளிட்ட பல்வேறு சுபநிகழ்ச்சிகள் அதிகம் நடைபெறுவதாலும் பூக்களின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.


Next Story