கடலூர் உள்பட 10 தாலுகா அலுவலகங்களில் பொது வினியோகத்திட்ட குறைதீர் முகாம் நாளை நடக்கிறது


கடலூர் உள்பட 10 தாலுகா அலுவலகங்களில் பொது வினியோகத்திட்ட குறைதீர் முகாம் நாளை நடக்கிறது
x
தினத்தந்தி 6 April 2023 6:45 PM GMT (Updated: 6 April 2023 6:45 PM GMT)

கடலூர் உள்பட 10 தாலுகா அலுவலகங்களில் பொது வினியோகத் திட்ட குறைதீர் முகாம் நாளை நடக்கிறது.

கடலூர்

கடலூர் மாவட்டத்தில் உள்ள 10 தாலுகா பகுதிகளிலும் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பொதுவினியோகத்திட்ட குறைதீர் முகாம் நடக்கிறது. இதன்படி கடலூர், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூர், ஸ்ரீமுஷ்ணம் ஆகிய தாலுகா அலுவலகங்களில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகங்களில் இந்த முகாம் நடக்கிறது.

இந்த முகாமில் குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை அல்லது நகல் குடும்ப அட்டை, கைப்பேசி எண் பதிவு அல்லது மாற்றம் செய்வதற்கான கோரிக்கை மனுக்களை அளிக்கலாம்.

மனுக்களை அளிக்கலாம்

இந்த மனுக்களின் மீது உடனடியாக தீர்வு காணப்படும். முகாமில் கைரேகையை பதிவு செய்ய இயலாத 65 வயதிற்கும் மேற்பட்ட ஆதரவற்ற முதியோர்கள் மற்றும் 60 சதவீதம் ஊனத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் நியாயவிலைக் கடைகளுக்கு சென்று பொது வினியோத்திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அத்தியாவசியப் பொருட்களை பெறுவதற்குரிய அங்கீகாரச் சான்று கோரி மனுக்களை அளிக்கலாம்.

இது தவிர கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், அதற்குரிய ஆவணங்களை சமர்ப்பித்து புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்குரிய மனுக்களை அளிக்கலாம். மூன்றாம் பாலினத்தவர், பழங்குடியினர் மற்றும் நரிக் குறவர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள், விடுபட்டு இருந்தால், அவர்களும் புதிய குடும்ப அட்டைகள் பெறுவதற்கு மனுக்கள் அனுப்பலாம்.

பொது வினியோகத்திட்டத்தின் கீழ் செயல்படும் நியாய விலைக் கடைகளின் செயல்பாடுகள் மற்றும் அத்தியாவசியப்பொருட்களின் தரம் குறித்த புகார்களையும் அளிக்கலாம். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story