மலைப்பாம்பு பிடிபட்டது


மலைப்பாம்பு பிடிபட்டது
x

மலைப்பாம்பு பிடிபட்டது

புதுக்கோட்டை

அன்னவாசல்:

அன்னவாசல் அருகே கடம்பராயன்பட்டியை சேர்ந்தவர் முருகேசன். இவர் அதே பகுதியில் புதிதாக வீடு ஒன்று கட்டி வருகிறார். இதையடுத்து அங்கு மலைப்பாம்பு ஒன்று இருப்பதாக இலுப்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தார். தகவலின் பேரில், இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் முருகேசன் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து மலைப்பாம்பை பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். பின்னர் அந்த மலைப்பாம்பை வனத்துறையினர் நார்த்தாமலை காப்பு காட்டில் கொண்டு விட்டனர்.

1 More update

Next Story