கூரை வீடு தீயில் எரிந்து சேதம்

விக்கிரவாண்டி அருகே கூரை வீடு தீயில் எரிந்து சேதம்
விக்கிரவாண்டி
விக்கிரவாண்டி அருகே உள்ள ஆலகிராமம் மேல்அக்ரஹார தெருவை சேர்ந்தவர் முரளி(வயது 30). நேற்று முன்தினம் இவருடைய கூரை வீட்டின் மேல்சென்ற மின்கம்பிகள் காற்றில் ஆடி ஒன்றோடொன்று உரசியதில் அதில் இருந்து பறந்த தீப்பொறிகள் விழுந்து கூரை வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது. இதுபற்றிய தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் அங்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இருப்பினும் வீட்டில் இருந்த துணிமணிகள், வீட்டு உபயோக பொருட்கள், 4 பஞ்சு மூட்டைகள் ஆகியவை எரிந்து சேதமடைந்தது. இதன் சேத மதிப்பு ரூ.50 ஆயிரமாகும்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





