வடமதுரையில் மயங்கி விழுந்த தையல் தொழிலாளி பலி


வடமதுரையில் மயங்கி விழுந்த தையல் தொழிலாளி பலி
x
தினத்தந்தி 1 April 2023 8:45 PM GMT (Updated: 1 April 2023 8:45 PM GMT)

வடமதுரையில் மயங்கி விழுந்த தையல் தொழிலாளி பலியானார்.

திண்டுக்கல்

வடமதுரை லக்கன் தெருவை சேர்ந்தவர் கருப்பையா (வயது 39). தையல் தொழிலாளி. கடந்த மாதம் 18-ந்தேதி இவர், வடமதுரை அரசு மதுபான கடை அருகே திடீரென மயங்கி விழுந்தார். இதனையடுத்து அவரது குடும்பத்தினர், கருப்பையாவை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் அவர், மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று கருப்பையா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கருப்பையாவின் தம்பி சக்திவேல், வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பழனிசாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்த கருப்பையா, கடந்த ஆண்டு ஜூலை மாதம் தனது மனைவி கற்பகத்தை கத்திரிக்கோலால் குத்திக்கொலை செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Related Tags :
Next Story