தாய் கண் முன்னே குளத்தில் மூழ்கி வாலிபர் சாவு


தாய் கண் முன்னே குளத்தில் மூழ்கி வாலிபர் சாவு
x

குடவாசல் அருகே பரிகாரம் செய்வதற்காக சென்ற வாலிபர் தாய் கண் முன்னே குளத்தில் மூழ்கி இறந்தான்.

திருவாரூர்

குடவாசல் அருகே பரிகாரம் செய்வதற்காக சென்ற வாலிபர் தாய் கண் முன்னே குளத்தில் மூழ்கி இறந்தான்.

இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

பரிகாரம் செய்வதற்காக...

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள தேதியூர் மேல அக்ரகார தெருவை சேர்ந்தவர் ஜெயகார்த்திக். இவரது மகன் சங்கர் கணேஷ்(வயது 18).

நேற்று காலை 7 மணிக்கு இவன் தனது தாய் உமாபார்வதியுடன் திருவீழிமிழலை வீழிநாதசாமி கோவிலுக்கு பரிகாரம் செய்வதற்காக சென்றான்.

குளத்தில் மூழ்கினான்

பரிகாரம் செய்வதற்கு முன்னதாக சங்கர் கணேஷ், கோவில் குளத்தில் குளிக்க சென்றான். அப்போது குளத்தில் ஆழமான பகுதிக்கு சென்றதால் திடீரென தண்ணீரில் மூழ்கினான். இதனை பார்த்த உமா பார்வதி, எனது மகன் தண்ணீரில் மூழ்கி விட்டான்... அவனை யாராவது காப்பாற்றுங்களேன்... என சத்தம் போட்டார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் அங்கு விரைந்து வந்து உடனடியாக குளத்தில் இறங்கி தண்ணீரில் மூழ்கிய சங்கர் கணேசை மீட்டனர்.

பரிதாப சாவு

பின்னர் அவனை திருவீழிமிழலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் சிறுவனுக்கு முதல் உதவி சிகிச்சை அளித்து நன்னிலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர், சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இதையடுத்து சிறுவனின் உடல் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

சோகம்

இதுகுறித்து எரவாஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜு, சப்- இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பரிகாரம் செய்வதற்காக சென்றபோது தாய் கண் முன்னே குளத்தில் மூழ்கி சிறுவன் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படு்த்தியது.


Next Story