வாலிபர் மின்சாரம் பாய்ந்து சாவு


வாலிபர் மின்சாரம் பாய்ந்து சாவு
x

மரத்தில் தழை வெட்டிய வாலிபர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.

பெரம்பலூர்

பாடாலூர்:

மின்சாரம் பாய்ந்தது

பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா புது அம்மாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 30). விவசாயியான இவர் ஆட்டுக்குட்டிகளுக்கு தழை வெட்டுவதற்காக வீட்டின் பின்புறத்தில் உள்ள மரத்தின் மீது ஏறியுள்ளார். மரத்தில் தழை வெட்டியபோது எதிர்பாராதவிதமாக அப்பகுதியில் செல்லும் மின்கம்பி மீது மரம் உரசியது. இதில் மணிகண்டன் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் மரத்தில் இருந்து கீழே விழுந்ததில் மணிகண்டன் படுகாயம் அடைந்தார்.

சாவு

இதனைக்கண்ட அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மணிகண்டன் இறந்தார். இது குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story