வாலிபர் அரிவாளால் வெட்டிக்கொலை

வாலிபர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
வாலிபரை அரிவாளால் வெட்டிக்கொன்ற 3 பேர் கொண்ட கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
அரிவாள் வெட்டு
திருவெறும்பூர் அருகே உள்ள வாழவந்தான் கோட்டை ஈச்சங்காடு பகுதியைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். இவரது மகன் கோபி (வயது 35). இவர் நேற்று இரவு துவாக்குடி அண்ணா வளைவு பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த 3 பேர் கொண்ட கும்பல் கோபியை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
போலீசார் விசாரணை
இது குறித்து தகவல் அறிந்த திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கோபியை எதற்காக கொன்றார்கள். அவரை வெட்டிய கும்பல் யார்? என்ற விவரம் தெரியவில்லை.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கோபியை கொன்ற 3 பேர் கொண்ட கும்பலை தேடி வருகின்றனர்.இரவில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






