கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை


கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
x

கோவில் உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றனர்.

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மேட்டுமுள்ளி குளத்தில் அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவிலின் பூட்டை உடைத்து மர்ம நபர்கள் உள்ளே புகுந்து அங்குள்ள உண்டியலை உடைத்து பணத்தை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து கோவில் நிர்வாகி கொடுத்த புகாரின் அடிப்படையில் மல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து கோவிலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story