அம்மன் கழுத்தில் அணிந்திருந்த 12 பவுன் நகை திருட்டு


அம்மன் கழுத்தில் அணிந்திருந்த 12 பவுன் நகை திருட்டு
x

அம்மன் கழுத்தில் அணிந்திருந்த 12 பவுன் நகையை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.

திருநெல்வேலி

அம்பை:

அம்பை அருகே உள்ள பிரம்மதேசத்தில் நாலாயிரத்து அம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்து நேற்று முன்தினம் மண்டல பூஜை நடைபெற்றது. இதற்காக அம்மன் கழுத்தில் நகைகள் அணிவிக்கப்பட்டு இருந்தது. இதை அறிந்த மர்ம நபர்கள் இரவு கோவிலின் பூட்டை உடைத்து அம்மன் கழுத்தில் அணிந்திருந்த சுமார் 12 பவுன் தங்க நகையை திருடிச் சென்றனர். இதன் மதிப்பு சுமார் ரூ.5 லட்சம் ஆகும். இதுகுறித்து தகவல் அறிந்த மர்மநபர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Next Story