மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.1 லட்சம் திருட்டு


மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.1 லட்சம் திருட்டு
x

மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.1 லட்சம் திருட்டப்பட்டுள்ளது.

கரூர்

தரகம்பட்டி அருகே உள்ள சின்னாகவுண்டனூரை சேர்ந்தவர் வீரபாண்டியன் (வயது 49). இவர் நேற்று முன்தினம் தனது மோட்டார் சைக்கிளில் தரகம்பட்டிக்கு வந்தார். பின்னர் தரகம்பட்டியில் உள்ள ஒரு வங்கியில் தனது கணக்கில் இருந்து ரூ.2 லட்சத்தை எடுத்தார். பின்னர் ரூ.1 லட்சத்தை தனது பாக்கெட்டிலும், ரூ.1 லட்சத்தை மோட்டார் சைக்கிளின் பெட்டியில் வைத்து கொண்டு கடவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தார்.

பின்னர் மோட்டார் சைக்கிளை வெளியே நிறுத்தி விட்டு, ஊராட்சி அலுவலகத்தின் உள்ளே சென்று விட்டு திரும்பி வந்தார். அப்போது அவரது மோட்டார் சைக்கிளின் பெட்டியை உடைத்து அதில், அவர் வைத்திருந்த ரூ.1 லட்சத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து வீரபாண்டி கொடுத்த புகாரின்பேரில், சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

1 More update

Next Story