டயர் வெடித்து வேன் கவிழ்ந்தது


டயர் வெடித்து வேன் கவிழ்ந்தது
x
தினத்தந்தி 26 Nov 2022 8:15 PM GMT (Updated: 26 Nov 2022 8:15 PM GMT)

ஆத்தூர் அருகே டயர் வெடித்து வேன் கவிழ்ந்தது. இதில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

சேலம்

ஆத்தூர்:-

ஆத்தூர் அருகே டயர் வெடித்து வேன் கவிழ்ந்தது. இதில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

ஊத்தங்கரை தர்கா

பெரம்பலூர் மாவட்டம் விஜயரங்க புரத்தைச் சேர்ந்த 16 பேர் ஒரு வேனில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள ஒரு தர்காவுக்கு சென்றனர். அங்கிருந்து நேற்று அதிகாலையில் வேன் மூலம் ஊருக்கு புறப்பட்டனர். வேன் ஆத்தூர் வழியாக வந்து கொண்டிருந்தது.

ஆத்தூர் அருகே கொத்தம்பாடி அழகாபுரம் பிரிவு ரோடு பகுதியில் வந்த போது வேனின் முன்பக்க டயர் திடீரென வெடித்தது. இதில் நிலைதடுமாறிய வேன் சாலையில் கவிழ்ந்தது.

10 பேர் படுகாயம்

இதில் வேன் டிரைவர் முஸ்தபா (வயது 32), சரோஜா (53), சாந்தி (48), சேக் உசேன் (17), கிருஷ்ணமூர்த்தி (54), பத்மன் பீவி (38), ஷேக் பாஷா (59), காசிம் (65), ராஜாமணி (45) உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. விபத்து குறித்து ஆத்தூர் ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


Next Story