டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலி


டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலி
x

டிராக்டர் கவிழ்ந்து விவசாயி பலியானார்.

வேலூர்

அணைக்கட்டு அருகே கெங்கநல்லூர் ஊராட்சி மலைச்சந்து பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35). விவசாயி. இவர் விவசாய நிலத்தில் ஏர் உழுவதற்காக நேற்று மாலை டிராக்டரை ஓட்டிச் சென்றார். நிலத்தில் வரப்புகள் உயரமாக இருந்ததால் அதன் மீது ஏறிச்சென்ற டிராக்டர் திடீரென தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் மணிகண்டன் அடியில் சிக்கிக் கொண்டார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து மணிகண்டனை மீட்டு அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக கூறினர்.

இதுகுறித்து அணைக்கட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story