கிணற்றில் தவறி விழுந்த குழந்தை பரிதாப சாவு


கிணற்றில் தவறி விழுந்த குழந்தை பரிதாப சாவு
x

கம்பைநல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த குழந்தை பரிதாபமாக இறந்தது. காப்பாற்ற முயன்ற தாயும், அண்ணனும் உயிருடன் மீட்டகப்பட்டனர்.

தர்மபுரி

மொரப்பூர்:

கம்பைநல்லூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த குழந்தை பரிதாபமாக இறந்தது. காப்பாற்ற முயன்ற தாயும், அண்ணனும் உயிருடன் மீட்டகப்பட்டனர்.

கிணற்றில் தவறி விழுந்த குழந்தை

கம்பைநல்லூர் அருகே ஒடசல்பட்டி புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவருடைய மனைவி மாசிலாமணி (வயது 30). இவர்களுக்கு ஹரிஷ் (3), கதிர்வேல் (6) ஆகிய 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

நேற்று முன்தினம் மாலையில் வீட்டின் அருகில் 2 குழந்தைகளும் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது வீட்டுக்கு அருகில் உள்ள கிணற்றில் சிறுவன் ஹரிஷ் தவறி விழுந்தான். இதைன பார்த்த தாய் மகனை காப்பாற்ற கிணற்றுக்குளு் குதித்தார். தாய் குதித்ததை கண்ட இன்னொரு மகன் கதிர்வேலும் கிணற்றுக்குள் குதித்தான்.

தண்ணீரில் மூழ்கி சாவு

இவர்கள் அலறி அடித்துக்கொண்டு கிணற்றுக்குள் குதித்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். அவர்கள் கிணற்றுக்குள் தண்ணீரில் தத்தளித்த 3 பேரையும் மீட்க முயன்றனர். ஆனால் ஹரிஷ் மூச்சு திணறி பரிதாபமாக இறந்தான்.

மேலும் தாய் மாசிலாமணி, இன்னொரு குழந்தை கதிர்வேல் ஆகிய 2 பேரையும் உயிரோடு மீட்டனர். ஹரிஷ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கம்பை நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


Next Story