ஏரிக்கரையில் வேன் கவிழ்ந்தது


ஏரிக்கரையில் வேன் கவிழ்ந்தது
x

வந்தவாசி அருகே ஏரிக்கரையில் வேன் கவிழ்ந்தது.

திருவண்ணாமலை

வந்தவாசி

திருச்சியில் இருந்து வாழைத்தார்களை ஏற்றிக்கொண்டு சதீஷ் என்பவர் வேனை ஓட்டிக்கொண்டு வந்தவாசி வழியாக காஞ்சீபுரத்திற்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது வந்தவாசியை அடுத்த தெய்யார் கிராமம் அருகே வரும்போது வேன் எதிர்பாராத விதமாக ஏரிக்கரையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் டிரைவர் சதீஷ் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இதையடுத்து கிரேன் மூலம் வேன் மீட்கப்பட்டது.


Next Story