சுவர் இடிந்து விழுந்து முதியவர் பலி

பத்தமடையில் சுவர் இடிந்து விழுந்து முதியவர் பலியானாா்.
அம்பை:
பத்தமடை மங்களா கீழத் தெருவைச் சேர்ந்தவர் மலுக்காமலி (வயது 67). மும்பையில் ெரயில்வே துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் நேற்று மாலை வீட்டின் ஒரு பகுதியிலுள்ள சுற்றுச்சுவரை கடப்பாரையால் இடித்துக் கொண்டிருந்தாராம். அப்போது எதிர்பாராத விதமாக சுமார் 8 அடி உயரமுள்ள சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுக்குள் மலுக்காமலி சிக்கிக் கொண்டார். இதில், அவர் சிறிது நேரத்தில் உயிரிழந்தார். பத்தமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





