ஒரேநாளில் 5 அடி உயர்வு: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105 அடியை தாண்டியது...!


ஒரேநாளில் 5 அடி உயர்வு: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 105 அடியை தாண்டியது...!
x

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 105 அடியை தாண்டியுள்ளது.

சேலம்,

கர்நாடகா மாநிலத்தில் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் கடந்த 8-ந் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் மேட்டூர் அணைக்கு கடந்த 2 நாட்களாக நீர்வரத்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 100 அடியாக இருந்தது.

இந்த நிலையில், காவிரியில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரேநாளில் 5.37 அடி உயர்ந்து 105.81 அடியை தாண்டியுள்ளது. நீர் இருப்பு 75.57 டிஎம்சியாக உள்ளது. அணைக்கான நீர்வரத்து 98.208 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 15,000 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.


Next Story