மது விற்ற பெண் கைது

மது விற்ற பெண் கைது செய்யப்பட்டாா்
மது விற்ற பெண் கைது
டி.என்.பாளையம் கள்ளிப்பட்டி அருகே உள்ள பெருமுகை ஊராட்சி ஏரங்காட்டூர் பகுதியில் பங்களாப்புதூர் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்கு பெண் ஒருவர் மது விற்று கொண்டிருந்தார். அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் அவர் ஏரங்காட்டூர் பத்மா நகரை சேர்ந்த சின்னப்பிள்ளை (வயது 52) என்பதும், அவர் சட்ட விரோதமாகபாட்டில்களை விற்பனைக்கு வைத்திருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சின்னப்பிள்ளையை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 7 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





