நெல்லையில் தி.மு.க. இளைஞரணி கூட்டம் நடக்கும் இடத்தில் பந்தல் அமைக்கும் பணி- அமைச்சர் ஆய்வு


நெல்லையில் தி.மு.க. இளைஞரணி கூட்டம் நடக்கும் இடத்தில் பந்தல் அமைக்கும் பணி- அமைச்சர் ஆய்வு
x

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 26-ந் தேதி நெல்லைக்கு வருவதை முன்னிட்டு தி.மு.க. இளைஞர் அணி செயல்வீரர் கூட்டம் நடக்கும் இடத்தில் பந்தல் அமைக்கும் பணியை அமைச்சர் தங்கம் தென்னரசு பார்வையிட்டார்.

திருநெல்வேலி

தி.மு.க. இளைஞர் அணி செயலாளரும், தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் வருகிற 26-ந்தேதி (வியாழக்கிழமை) நெல்லைக்கு வருகிறார். அவர் பாளையங்கோட்டையில் நடைபெறும் தி.மு.க. இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

இதில் இளைஞர் அணி செயல்வீரர்கள் கூட்டம் கே.டி.சி. நகர் 4 வழிச்சாலை மேம்பாலம் அருகில் நடைபெறுகிறது. இதற்காக அங்கு பிரமாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

பந்தல் அமைக்கும் பணிகளை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். முன்னதாக பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சி நடைபெறக்கூடிய மாதா மாளிகை மண்டபத்தையும் பார்வையிட்டார். அப்போது அங்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை நடத்தினார்.

நிகழ்ச்சியில் நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இரா.ஆவுடையப்பன், நெல்லை மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான், அப்துல் வகாப் எம்.எல்.ஏ., மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாநகர செயலாளர் சு.சுப்பிரமணியன், வர்த்தக அணி மாநில இணை செயலாளர் மாலைராஜா, நெல்லை கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் கிரகாம்பெல், தலைமை செயற்குழு உறுப்பினர் ஆ.பிரபாகரன், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் பரமசிவ அய்யப்பன், மாநில விவசாய தொழிலாளர் அணி துணை அமைப்பாளர் கணேஷ்குமார் ஆதித்தன், மத்திய மாவட்ட துணை செயலாளர்கள் தர்மன், எஸ்.வி.சுரேஷ், இளைஞர் அணி மத்திய மாவட்ட அமைப்பாளர் வில்சன் மணித்துரை, மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் கருப்பசாமி கோட்டையப்பன், ஒன்றிய செயலாளர்கள் நாங்குநேரி சுடலைக்கண்ணு, பாளையங்கோட்டை வடக்கு வேலன்குளம் முருகன், மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் செல்வசூடாமணி, இளைஞரணி நிர்வாகி விஜயாபதி ஏ.ஆர்.ரஹ்மான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story