விபத்தில் தொழிலாளி பலி
விபத்தில் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
கடலூர்
ராமநத்தம்,
திருநெல்வேலியில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. வேப்பூர் அருகே ஐவதுகுடி தனியார் கல்லூரி அருகே சென்ற போது, லாரி எதிர்பாராதவிதமாக முன்னால் சென்ற வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் லாரியில் வந்த திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த தொழிலாளி கோவிந்தன் (வயது 44) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயமடைந்த லாரி டிரைவர் சிகிச்சைக்காக வேப்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து வேப்பூா் போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story