விபத்தில் தொழிலாளி பலி


விபத்தில் தொழிலாளி பலி
x
தினத்தந்தி 30 Jan 2023 7:45 PM GMT (Updated: 31 Jan 2023 5:30 AM GMT)
தர்மபுரி

பாப்பாரப்பட்டி:-

பாப்பாரப்பட்டி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 60). நெசவு தொழிலாளி. இவர், பாப்பாரப்பட்டி- தர்மபுரி சாலையில் மின்வாரிய அலுவலகம் அருகில் சாலையை கடக்க முயன்றார். அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சுப்பிரமணி படுகாயம் அடைந்தார். அவரை தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக பெங்களூரூவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சுப்பிரமணி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து பாப்பாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் சுப்பிரமணி மீது மோதிய மோட்டார் சைக்கிள் குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.


Related Tags :
Next Story