தொழிலாளி மர்மச்சாவு


தொழிலாளி மர்மச்சாவு
x

தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அடுத்த கே.சி.மோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மகன் பாலாஜி (வயது 34) கூலித் தொழிலாளி. இவர் பள்ளத்தூர் அடுத்த ராமாபுரம் பகுதியில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் பனமடங்கி போலீசார் சென்று உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update

Next Story