தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவிப்பு


தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவிப்பு
x

தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவிப்பு

மதுரை

அலங்காநல்லூர்

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 217-வது நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அலங்காநல்லூரில் தீரன் சின்னமலையின் நினைவு நாள் குருபூஜை நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி அவரது முழு உருவ சிலைக்கு சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் கென்னடி கண்ணன், பரந்தாமன், பேரூராட்சி தலைவர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். கவுண்டர் மகாஜன சங்கத்தின் சார்பில் தலைவர் விஜயன், அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த மேற்கு மாவட்ட செயலாளர் முருகேசன், கொங்கு இளைஞர் பேரவை மாவட்ட தலைவர் பார்த்திபன், மாவட்ட செயலாளர் அய்யூர் தயாளன், இளைஞரணி செயலாளர் பாலகிருஷ்ணன், காங்கிரஸ் சார்பில் வட்டார தலைவர்கள் சுப்புராயல், காந்திஜி, பாண்டியராஜன், பாலமேடு கவுண்டர் சங்கம் சார்பில் தலைவர் ராமராஜ் தலைமையில் தீரன் சின்னமலை சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. மேலும் பா.ஜ.க., பா.ம.க. உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story