நல்லம்பள்ளி அருகேஅடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் லேப்டாப், செல்போன் திருட்டு


நல்லம்பள்ளி அருகேஅடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் லேப்டாப், செல்போன் திருட்டு
x
தினத்தந்தி 31 Aug 2023 7:00 PM GMT (Updated: 31 Aug 2023 7:01 PM GMT)
தர்மபுரி

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே சித்தூர் கிராமத்தில் குடிசை மாற்றுவாரியம் சார்பில் 608 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணியை சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரரின் மேலாளர் சண்முகநாதன் என்பவர் கவனித்து வருவதாக கூறப்படுகிறது, அவர் தங்குவதற்கு சீட்டு போட்ட அறை உள்ளது. அந்த அறையில் இருந்த சுமார் ரூ.85 ஆயிரம் மதிப்பிலான லேப்டாப், செல்போன்கள் மற்றும் அளவீடு செய்யும் கருவி என விலை உயர்ந்த பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்து சண்முகநாதன் அதியமான்கோட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லேப்டாப், செல்போன் மற்றும் அளவீடு கருவிகளை திருடி சென்ற மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story