வீடு புகுந்து 6 பவுன் நகை திருட்டு


வீடு புகுந்து 6 பவுன் நகை திருட்டு
x

வீடு புகுந்து 6 பவுன் நகை திருட்டு போனது.

மதுரை
மதுரை ஊமச்சிகுளம் அருகே உள்ள பேச்சிகுளம் பகுதியை சேர்ந்தவர் வீரமணிகண்டன் (வயது 29). இவரது வீட்டில் இருந்த 6 பவுன் நகை திருடுபோனது. இதுகுறித்து அவர் ஊமச்சிகுளம் போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும், அந்த புகாரில் பீ.பி.குளம் பகுதியை சேர்ந்த பவித்ரா என்பவர் நகையை திருடி இருக்கலாம் என தெரிவித்துள்ளார். அதன்பேரில் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



Next Story