திருச்செங்கோடு அருகே எல்.ஐ.சி. ஏஜெண்டு வீட்டில் 6½ பவுன் நகை, ரூ.2 லட்சம் திருட்டு


திருச்செங்கோடு அருகே   எல்.ஐ.சி. ஏஜெண்டு வீட்டில் 6½ பவுன் நகை, ரூ.2 லட்சம் திருட்டு
x

திருச்செங்கோடு அருகே எல்.ஐ.சி. ஏஜெண்டு வீட்டில் 6½ பவுன் நகை, ரூ.2 லட்சம் ஆகியவற்றை திருடி சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல்

எலச்சிபாளையம்:

திருச்செங்கோடு அருகே எல்.ஐ.சி. ஏஜெண்டு வீட்டில் 6½ பவுன் நகை, ரூ.2 லட்சம் ஆகியவற்றை திருடி சென்ற மர்மநபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எல்.ஐ.சி. ஏஜெண்டு

திருச்செங்கோடு அருகே சித்தாளந்தூர் அம்மன் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பழனியப்பன் (வயது 60). எல்.ஐ.சி. ஏஜெண்டு. இவருடைய மனைவி சரஸ்வதி (51). இவர்களுடைய மகள் கல்பனா (30). இவர்கள் அம்மன் தோட்டம் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் உலகப்பம்பாளையத்தில் உள்ள தோட்டத்து வீட்டிற்கு இவர்கள் அடிக்கடி சென்று வருவது வழக்கம் என்று கூறப்படுகிறது. இதை நோட்டமிட்ட மர்மநபர்கள் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

பணம், நகை திருட்டு

பின்னர் அங்கு இருந்த பீரோவை உடைத்து அதில் வைக்கப்பட்டிருந்த நகை, பணத்தை திருடி சென்றனர். நேற்று காலை வீட்டிற்கு வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த ரூ.2 லட்சம் மற்றும் 6½ பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து பழனியப்பன் திருச்செங்கோடு ரூரல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருட்டில் ஈடுபட்ட மர்மநபர்களை தேடி வருகின்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்மநபர்கள் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story