மளிகை கடைக்காரர் வீட்டில் நகை, பணம் திருட்டு


மளிகை கடைக்காரர் வீட்டில் நகை, பணம் திருட்டு
x

காவேரிப்பட்டணத்தில் மளிகை கடைக்காரர் வீட்டில் நகை, பணம் திருட்டு போனது.

கிருஷ்ணகிரி

காவேரிப்பட்டணம்

காவேரிப்பட்டணம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் லட்சுமி நகர் பகுதியை சேர்ந்தவர் தாமோதரன் (வயது 42). மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த 4-ந் தேதி இவர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பினார். அப்போது வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ரூ. 8 ஆயிரம், 2½ பவுன் நகை, வெள்ளி நகைகள் திருட்டு போனது தெரியவந்தது. வீடு பூட்டி இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து தாமோதரன் காவேரிப்பட்டணம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்கள் குறித்த விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story