3 ஆடுகள் திருட்டு


3 ஆடுகள் திருட்டு
x
தினத்தந்தி 23 Dec 2022 6:45 PM GMT (Updated: 24 Dec 2022 5:42 AM GMT)
தர்மபுரி

அரூர்:

அரூர் அருகே பெரியப்பட்டியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 40). விவசாயி. இவர் 20 ஆடுகளை வளர்த்து வருகிறார். இந்த நிலையில் ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றுவிட்டு பட்டியில் ஆடுகளை அடைத்தார். பின்னர் மறுநாள் காலை சென்று பார்த்தபோது பட்டியில் கட்டப்பட்டிருந்த 3 ஆடுகள் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து பெருமாள் கோட்டப்பட்டி போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story