பெண் போலீஸ் வீட்டில் நகை திருட்டு


பெண் போலீஸ் வீட்டில் நகை திருட்டு
x
தினத்தந்தி 20 Jun 2023 1:00 AM IST (Updated: 20 Jun 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

அரூர்:

அரூர் அருகே உள்ள பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள் (வயது 48). பால் வியாபாரி. இவருடைய மனைவி சேலத்தில் போலீஸ்காரராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் பெருமாள் வீட்டை பூட்டி விட்டு சேலத்துக்கு சென்றார். பின்னர் மீண்டும் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டில் உள்ளே சென்று பார்த்தார். அப்போது பீரோவில் வைக்கப்பட்டிருந்த 3 பவுன் நகை திருட்டு போனது தெரிந்தது. இது தொடர்பாக பெருமாள் அரூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 More update

Next Story